என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பசி எடுப்பது ஏன் தெரியுமா?
Byமாலை மலர்2 Feb 2021 8:36 AM GMT (Updated: 2 Feb 2021 8:36 AM GMT)
தினமும் ஒரே நேரத்துக்கு சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சரியாக அந்த நேரத்துக்குப் பசியெடுக்கும்.
நாம் பெரும்பாலும் ‘வயிறு பசிக்கிறது’ என்றுதான் சொல்கிறோம். உண்மையில் பசியெடுப்பதற்கு வயிறே தேவையில்லை. ஒருவருடைய வயிற்றை அகற்றி விட்டாலும் கூட, அவர் அவ்வப்போது பசியை உணரவே செய்வார். அப்படியானால் பசி உணர்வை ஏற்படுத்துவது எது என்ற கேள்வி தோன்றுகிறது அல்லவா?
மூளைதான் பசி உணர்வை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உட லுக்குத் தேவையான ஊட்டப்பொருட்கள் ரத்தத்தில் குறைந்து விட்டன என்பதைத் தெரிவிக்கத்தான் பசி உண்டாகிறது.
ரத்தத்தில் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு போன்றவை தேவையான அளவுக்கு இருக்கிறதா என மூளை விழிப்போடு கவனித்துக் கொண்டிருக்கும். இதில் ஏதாவது குறைந்துவிட்டால், அந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டுமல்லவா? அதற்காகத்தான் பசியெடுக்கிறது. அப்போது நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான சத்துகள் ஈடுசெய்யப்படுகின்றன. தட்பவெப்பநிலை மாற்றங்களும் பசியைப் பாதிக்கின்றன.
அதிகமான வெப்பம் நிலவும்போது, உடல் இயக்கத்துக்குத் தேவையான எரிபொருளின் தேவை குறையும். அதனால் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் அதிக எரிபொருள் தேவைப்படுவதால், பசியின் அளவும் அதிகமாக இருக்கும். தினமும் ஒரே நேரத்துக்கு சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சரியாக அந்த நேரத்துக்குப் பசியெடுக்கும்.
மூளைதான் பசி உணர்வை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உட லுக்குத் தேவையான ஊட்டப்பொருட்கள் ரத்தத்தில் குறைந்து விட்டன என்பதைத் தெரிவிக்கத்தான் பசி உண்டாகிறது.
ரத்தத்தில் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு போன்றவை தேவையான அளவுக்கு இருக்கிறதா என மூளை விழிப்போடு கவனித்துக் கொண்டிருக்கும். இதில் ஏதாவது குறைந்துவிட்டால், அந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டுமல்லவா? அதற்காகத்தான் பசியெடுக்கிறது. அப்போது நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான சத்துகள் ஈடுசெய்யப்படுகின்றன. தட்பவெப்பநிலை மாற்றங்களும் பசியைப் பாதிக்கின்றன.
அதிகமான வெப்பம் நிலவும்போது, உடல் இயக்கத்துக்குத் தேவையான எரிபொருளின் தேவை குறையும். அதனால் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் அதிக எரிபொருள் தேவைப்படுவதால், பசியின் அளவும் அதிகமாக இருக்கும். தினமும் ஒரே நேரத்துக்கு சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சரியாக அந்த நேரத்துக்குப் பசியெடுக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X