என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
‘ஹீலிங்’ முறை சிகிச்சை
Byமாலை மலர்19 Dec 2020 4:13 AM GMT
‘ஹோ ஒப்பானோபானோ’ என்பது ஒரு ஹவாய் பழங்குடியின ஹீலிங் முறை சிகிச்சை. ஆழ் மன வெறுப்பு, கோபம் அல்லது துக்கத்தை வெளிக் கொணர்ந்து அதன் மூலம் உடலைச் சுத்தப்படுத்தும் வழிமுறை இது.
‘ஹோ ஒப்பானோபானோ’ என்பது ஒரு ஹவாய் பழங்குடியின ஹீலிங் முறை சிகிச்சை. இது ஒரு மன்னிப்பு கோருதல் போன்றதுதான். ஆனால், சற்றே ஆழமானது. ஆழ் மன வெறுப்பு, கோபம் அல்லது துக்கத்தை வெளிக் கொணர்ந்து அதன் மூலம் உடலைச் சுத்தப்படுத்தும் வழிமுறை இது. உடலில் நோய் வந்தால் அதற்கு ஆழ்மனத்தில் உள்ள கோபமோ வருத்தமோதான் காரணம் என்று இந்தப் பழங்குடிகள் நம்புகிறார்கள். அதனால் ஒருவர் சுகவீனமாக இருந்தால், அதை அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்ப்பதில்லை. சரிசெய்ய வேண்டிய ஒன்றின் தேவை வந்துவிட்டதாக உடனே உணர்கிறார்கள்.
அது ஒருவர் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்காது; கண்டிப்பாக மற்றவர்களின் பங்களிப்பும் உண்டு என்பதால், பெரும்பாலும் இது குடும்பமாகத்தான் கையாளப்படும். வீட்டில் பெரியவர்தான் இதைச் செய்துவைப்பார். அவரும் அதில் சம்பந்தப்பட்டிருந்தாலோ வேறு காரணங்கள் இருந்தாலோ, அந்தப் பழங்குடி இனத்தில் உள்ள வேறு ஒரு பெரியவர் அழைக்கப்படுவார்.
கலந்து பேசுதல், பிரார்த்தனை, சுய சுத்திகரிப்பு, மன்னிப்பு கோருதல் எல்லாம் நடக்கும். இறுதியில் ஒரு குறிப்பிட்ட மூலிகையை உண்டு இந்தச் சடங்கை முடித்துக்கொள்வார்கள். எந்த கிலேசமும் மன அளவில் தங்காமல் இருக்க இவர்கள் குடும்பமாக, கூட்டமாக இதைச் செய்கிறார்கள். இதைச் செய்து முடித்தால் உடல்நலம் குன்றியவர் தேறுவதை உறுதி செய்கின்றனர்.
உடல் நலமற்றவருக்கு இது பிரச்சினை எனக் கொள்ளக்கூடாது. அவர் ஓர் உறவு அல்லது குடும்ப சீர்கேட்டை தன் உடல் மூலம் தெரிவிக்கிறார் என்று பொருள். அவருக்கு மட்டும் தனியே வைத்தியம் செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் வைத்திய நடைமுறைக்கு உட்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்டவர் தன் உள் மன போராட்டத்தைக் கொட்டி தீர்க்க உதவுகிறார்கள். இதன் மூலம் தனி நபர்களாகவும் உணர்வுகளுக்கும், உடலுக்கும் உள்ள உறவை புரிந்து மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
இதே போன்ற வழிமுறைகள் உலகமெங்கும் பல பழங்குடிகளிடம் உள்ளன. இவை மெல்ல மெல்ல வளர்ந்த நாடுகளை அடைந்து நல்ல வடிவம் பெற்றுவிட்டது. இன்று பலர் ஹோ ஒப்பானோபானோவை சிகிச்சை முறையாக கற்றுத் தருகின்றனர். யாரும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் நான்கு விஷயங்களை கூறுகிறார்கள்.
அந்த நான்கு விஷயங்கள் வருத்தம் தெரிவித்தல், மன்னிப்பு கோருதல், நன்றி சொல்லுதல், அன்பு செலுத்துதல். இதை நான்கு அபர்மேஷன்கள் என்றும் சொல்லலாம். ‘நான் வருத்தம் அடைகிறேன்.’, ‘நான் மன்னிப்பு கேட்கிறேன்.’, ‘நான் நன்றி செலுத்துகிறேன்’, ‘நான் அன்பு செலுத்துகிறேன்.’ எந்த பிரச்சினை என்றாலும் அடுத்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பார். அவரிடம் இந்த 4 வாக்கியங்களைச் சொல்லுங்கள். நேரில் சொல்லக்கூட அவசியமில்லை. அவரை நினைத்து எழுதுங்கள். அல்லது தனிமையில்கூடச் சொல்லுங்கள்.
முதலில், யாரிடம் பிரச்சினையோ அவரிடம் மன்னிப்பு கோருதல் என்பது தர்க்க ரீதியாக கடினமாக இருக்கும். ஆனால் அதுதான் தொடக்கப் புள்ளி. இந்த முதல் வாக்கியம் நடப்பதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணரச் செய்கிறது. சுய பொறுப்பு தெரிவது மாறுதலின் முதல் படி தன் நிலையை மாற்றுவதுதான் எனப்புரியும்.
தான் இடம் கொடுக்காமல் இந்த நிலை வராது என்பதால்தான், செய்ததற்கு முதலில் வருத்தம் அடைவது முதல் படி. தனக்கு வருத்தம் வந்ததைப்போல் எதிராளிக்கும் வருத்தமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எது சரி, எது நியாயம் என்பதைவிட வருத்தமும் வலியும் எதிராளிக்கும் உண்டு என்று கண்டுகொண்டு மன்னிப்பு கோருதல் இரண்டாம் படி. இந்த ஹீலிங் முறை சிகிச்சை மூலம் மனதளவிலும், உடல் அளவிலும் வலிமை கிடைக்கும் என்கின்றனர் ஹவாய் பழங்குடிகள்.
அது ஒருவர் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்காது; கண்டிப்பாக மற்றவர்களின் பங்களிப்பும் உண்டு என்பதால், பெரும்பாலும் இது குடும்பமாகத்தான் கையாளப்படும். வீட்டில் பெரியவர்தான் இதைச் செய்துவைப்பார். அவரும் அதில் சம்பந்தப்பட்டிருந்தாலோ வேறு காரணங்கள் இருந்தாலோ, அந்தப் பழங்குடி இனத்தில் உள்ள வேறு ஒரு பெரியவர் அழைக்கப்படுவார்.
கலந்து பேசுதல், பிரார்த்தனை, சுய சுத்திகரிப்பு, மன்னிப்பு கோருதல் எல்லாம் நடக்கும். இறுதியில் ஒரு குறிப்பிட்ட மூலிகையை உண்டு இந்தச் சடங்கை முடித்துக்கொள்வார்கள். எந்த கிலேசமும் மன அளவில் தங்காமல் இருக்க இவர்கள் குடும்பமாக, கூட்டமாக இதைச் செய்கிறார்கள். இதைச் செய்து முடித்தால் உடல்நலம் குன்றியவர் தேறுவதை உறுதி செய்கின்றனர்.
உடல் நலமற்றவருக்கு இது பிரச்சினை எனக் கொள்ளக்கூடாது. அவர் ஓர் உறவு அல்லது குடும்ப சீர்கேட்டை தன் உடல் மூலம் தெரிவிக்கிறார் என்று பொருள். அவருக்கு மட்டும் தனியே வைத்தியம் செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் வைத்திய நடைமுறைக்கு உட்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்டவர் தன் உள் மன போராட்டத்தைக் கொட்டி தீர்க்க உதவுகிறார்கள். இதன் மூலம் தனி நபர்களாகவும் உணர்வுகளுக்கும், உடலுக்கும் உள்ள உறவை புரிந்து மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
இதே போன்ற வழிமுறைகள் உலகமெங்கும் பல பழங்குடிகளிடம் உள்ளன. இவை மெல்ல மெல்ல வளர்ந்த நாடுகளை அடைந்து நல்ல வடிவம் பெற்றுவிட்டது. இன்று பலர் ஹோ ஒப்பானோபானோவை சிகிச்சை முறையாக கற்றுத் தருகின்றனர். யாரும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் நான்கு விஷயங்களை கூறுகிறார்கள்.
அந்த நான்கு விஷயங்கள் வருத்தம் தெரிவித்தல், மன்னிப்பு கோருதல், நன்றி சொல்லுதல், அன்பு செலுத்துதல். இதை நான்கு அபர்மேஷன்கள் என்றும் சொல்லலாம். ‘நான் வருத்தம் அடைகிறேன்.’, ‘நான் மன்னிப்பு கேட்கிறேன்.’, ‘நான் நன்றி செலுத்துகிறேன்’, ‘நான் அன்பு செலுத்துகிறேன்.’ எந்த பிரச்சினை என்றாலும் அடுத்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பார். அவரிடம் இந்த 4 வாக்கியங்களைச் சொல்லுங்கள். நேரில் சொல்லக்கூட அவசியமில்லை. அவரை நினைத்து எழுதுங்கள். அல்லது தனிமையில்கூடச் சொல்லுங்கள்.
முதலில், யாரிடம் பிரச்சினையோ அவரிடம் மன்னிப்பு கோருதல் என்பது தர்க்க ரீதியாக கடினமாக இருக்கும். ஆனால் அதுதான் தொடக்கப் புள்ளி. இந்த முதல் வாக்கியம் நடப்பதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணரச் செய்கிறது. சுய பொறுப்பு தெரிவது மாறுதலின் முதல் படி தன் நிலையை மாற்றுவதுதான் எனப்புரியும்.
தான் இடம் கொடுக்காமல் இந்த நிலை வராது என்பதால்தான், செய்ததற்கு முதலில் வருத்தம் அடைவது முதல் படி. தனக்கு வருத்தம் வந்ததைப்போல் எதிராளிக்கும் வருத்தமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எது சரி, எது நியாயம் என்பதைவிட வருத்தமும் வலியும் எதிராளிக்கும் உண்டு என்று கண்டுகொண்டு மன்னிப்பு கோருதல் இரண்டாம் படி. இந்த ஹீலிங் முறை சிகிச்சை மூலம் மனதளவிலும், உடல் அளவிலும் வலிமை கிடைக்கும் என்கின்றனர் ஹவாய் பழங்குடிகள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X