என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை
Byமாலை மலர்7 July 2020 9:19 AM GMT (Updated: 7 July 2020 9:19 AM GMT)
இருமல், சளி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை போக்கவல்ல நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த கல்யாண முருங்கை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ கூடி வருகிறது.
கொரோனா பீதி காரணமாக தற்போது உணவு முறைகளில் மக்கள் தீவிரமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னைவாசிகள் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. நோய் திர்ப்பு சக்தியூட்டும் சத்தான ஆகாரங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் மீண்டும் உயிர் பெற்று வரும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.
இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.
இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன. இதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரபிரசாதமாகவும் அமைகின்றன.
ஆரம்பத்தில் கல்யாண முருங்கை இலைகளை மருத்துவ குணங்களுக்காக ஆர்வத்துடன் மக்கள் பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந்த இலைகள் மீதான மக்கள் பார்வை மங்கத் தொடங்கியது.
இப்போதும் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியங்களில் கல்யாண முருங்கை இலைச்சாறு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மர இலைகளுக்கு மீண்டும் மவுசு திரும்ப தொடங்கி வைக்கிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலைகளை வாங்கி விருப்பப்படும் உணவுகளாக சாப்பிட்டு வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மீண்டும் உயிர் பெற்று வரும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.
இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.
இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன. இதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரபிரசாதமாகவும் அமைகின்றன.
ஆரம்பத்தில் கல்யாண முருங்கை இலைகளை மருத்துவ குணங்களுக்காக ஆர்வத்துடன் மக்கள் பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந்த இலைகள் மீதான மக்கள் பார்வை மங்கத் தொடங்கியது.
இப்போதும் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியங்களில் கல்யாண முருங்கை இலைச்சாறு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மர இலைகளுக்கு மீண்டும் மவுசு திரும்ப தொடங்கி வைக்கிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலைகளை வாங்கி விருப்பப்படும் உணவுகளாக சாப்பிட்டு வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X