என் மலர்
பெண்கள் உலகம்

இரத்தம் உறையாமை விழிப்புணர்வு
இரத்தம் உறையாமை விழிப்புணர்வு தினம்
இந்த ரத்தப்போக்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ‘உலக ரத்தம் உறையாமை விழிப்புணா்வு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதைப்பற்றி இங்கே பார்க்கலாம்..
நமது உடலின் எல்லா பாகங்களிலும் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ரத்தம், காயம் ஏற்படும்போது வெளியேறுவது உண்டு. சிறு காயங்களால் ஏற்படும் ரத்தக்கசிவு நிற்காமல் அதிக ரத்தம் வெளியேறினால் அது ரத்தம் உறையாமை (ஹீமோபிலியா) பாதிப்பாக இருக்கலாம்.
நீங்கள் விளையாடும்போது ஏற்படும் காயங்களால், உங்களுக்கோ, உங்களோடு விளையாடும் மற்றவருக்கோ ரத்தக் கசிவு ஏற்பட்டு, அது நிற்காவிட்டால் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் நிற்காத ரத்தப்போக்கு ஆபத்தானது.
மூக்கில் இருந்து காரணம் இல்லாமல் ரத்தம் கசிவது, தோலின் நிறம் மாறி ரத்தச்சிவப்பாக காணப்படுவது, மலத்துடன் ரத்தம் கசிவது ஆகியவையும் ஹீமோபிலியாவின் அறிகுறியே. இது ஒரு மரபு வழி நோயாகும். உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைதல், குறிப்பிட்ட சத்துக்குறைபாடு மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் ரத்தம் உறையாமைக்கு காரணமாவது உண்டு.
எக்ஸ் குரோமோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றமே ரத்தம் உறையாமைக்கு காரணம் என்று அறியப்பட்டு உள்ளது. பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
ரத்தம் உறையாமை பாதிப்பு, ஹீமோபிலியா ஏ, பி, சி என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஹீமோபிலியா-ஏ குறைபாடுதான் பரவலாக காணப்படுகிறது. இது லேசானது, மிதமானது, தீவிரமானது என்று வகைப்படுத்தப்படுகிறது. மற்ற வகை ரத்தம் உறையாமை பாதிப்பு அபூர்வமாக உள்ளது.
பெற்றோருக்கு இதுபோன்ற ரத்தம் உறையாமை பாதிப்பு இருந்தால், குழந்தைகளுக்கும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படுமா என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்த அணுக்களின் அமைப்பு, ரத்தக்கசிவு நேரம், ரத்தம் உறையும் நேரம் ஆகியவை மதிப்பிடப்பட்டு இந்த நோய் கணிக்கப்படுகிறது. ரத்த உறைபொருள் குறைவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ரத்தக்கசிவால் பாதிக்கப்படும்போது, ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. அதிக ரத்த இழப்பு ஏற்பட்டாலோ, அடிக்கடி ரத்த இழப்பு ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று ரத்தம் செலுத்தப்பட வேண்டும். சிலருக்கு ரத்த பிளாஸ்மாவை செலுத்த வேண்டிய நிலை வரும்.
தற்போதைய காலங்களில் ரத்தக் கசிவைத் தடுக்க சில மருந்துகள் உள்ளன. டிரான்ஸ்மிக் அமிலம் சிறிய ரத்தக்கசிவைத் தடுக்க உதவும். இது ரத்த உறைபொருளை ரத்தத்தில் அதிகரிக்க உதவுகிறது.
மருந்துகள் அல்லாமல் உளவியல் ஆலோசனைகள் மூலம் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி ஆபத்தை குறைக்கலாம். ரத்தம் வழிதல் குழந்தைப் பருவத்தில் கண்டறியப்பட்டால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ரத்தம் வழிதல் குறைபாடு கொண்டவர்கள், பல் நீக்கம் மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டாக்டரிடம் அதுபற்றி முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். நெருங்கிய உறவில் திருமணம் செய்பவர் களின் வாரிசுகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இதைத் தவிர்க்க வேண்டும்.
காயம் ஏற்பட்டு உடலுக்கு வெளியே ரத்தக்கசிவு ஏற்படுவதுபோல, உடலுக்கு உள்ளேயே தோலின் அடியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிவந்ததுபோல மாற்றம் காணப்படுவதும், ஒருவகை ஹீமோபிலியாதான். இதுவும் ஆபத்தானதுதான். சிலருக்கு கொஞ்சம் கடினமான வேலைகள், பயிற்சிகள் செய்தாலே இந்த மாற்றங்களை தோலின் அடியில், மூட்டு இணைப்பு கள் உள்ள இடங்களில் காண முடியும்.
10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ரத்தம் உறையாமை பாதிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு இந்தக் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் கடந்த வருடம் வரை சுமார் 20 ஆயிரம் பேரே ஹீமோபிலியா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் இந்தப் பாதிப்பு, அதிகமானவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பில்லை என்பது ஆறுதலான விஷயம். அறிகுறி தென்படுபவர்கள் எச்சரிக்கையாக இருந்தால் உயிர்காக்க முடியும்.
கனடாவைச் சேர்ந்த பிராஞ்க் சன்னேபல் என்பவர் ரத்தம் உறையாமை பற்றி விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டார். அவரது பிறந்த நாளான (இன்று) ஏப்ரல் 17-ந் தேதி, உலக ஹீமோபிலியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பெரும் முயற்சிகள், ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அதுவரையில் விழிப்புடன் இருப்போம்; ஆபத்தை தவிர்ப்போம்.
நீங்கள் விளையாடும்போது ஏற்படும் காயங்களால், உங்களுக்கோ, உங்களோடு விளையாடும் மற்றவருக்கோ ரத்தக் கசிவு ஏற்பட்டு, அது நிற்காவிட்டால் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் நிற்காத ரத்தப்போக்கு ஆபத்தானது.
மூக்கில் இருந்து காரணம் இல்லாமல் ரத்தம் கசிவது, தோலின் நிறம் மாறி ரத்தச்சிவப்பாக காணப்படுவது, மலத்துடன் ரத்தம் கசிவது ஆகியவையும் ஹீமோபிலியாவின் அறிகுறியே. இது ஒரு மரபு வழி நோயாகும். உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைதல், குறிப்பிட்ட சத்துக்குறைபாடு மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் ரத்தம் உறையாமைக்கு காரணமாவது உண்டு.
எக்ஸ் குரோமோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றமே ரத்தம் உறையாமைக்கு காரணம் என்று அறியப்பட்டு உள்ளது. பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
ரத்தம் உறையாமை பாதிப்பு, ஹீமோபிலியா ஏ, பி, சி என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஹீமோபிலியா-ஏ குறைபாடுதான் பரவலாக காணப்படுகிறது. இது லேசானது, மிதமானது, தீவிரமானது என்று வகைப்படுத்தப்படுகிறது. மற்ற வகை ரத்தம் உறையாமை பாதிப்பு அபூர்வமாக உள்ளது.
பெற்றோருக்கு இதுபோன்ற ரத்தம் உறையாமை பாதிப்பு இருந்தால், குழந்தைகளுக்கும் அதுபோன்ற பாதிப்பு ஏற்படுமா என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்த அணுக்களின் அமைப்பு, ரத்தக்கசிவு நேரம், ரத்தம் உறையும் நேரம் ஆகியவை மதிப்பிடப்பட்டு இந்த நோய் கணிக்கப்படுகிறது. ரத்த உறைபொருள் குறைவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ரத்தக்கசிவால் பாதிக்கப்படும்போது, ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. அதிக ரத்த இழப்பு ஏற்பட்டாலோ, அடிக்கடி ரத்த இழப்பு ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று ரத்தம் செலுத்தப்பட வேண்டும். சிலருக்கு ரத்த பிளாஸ்மாவை செலுத்த வேண்டிய நிலை வரும்.
தற்போதைய காலங்களில் ரத்தக் கசிவைத் தடுக்க சில மருந்துகள் உள்ளன. டிரான்ஸ்மிக் அமிலம் சிறிய ரத்தக்கசிவைத் தடுக்க உதவும். இது ரத்த உறைபொருளை ரத்தத்தில் அதிகரிக்க உதவுகிறது.
மருந்துகள் அல்லாமல் உளவியல் ஆலோசனைகள் மூலம் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி ஆபத்தை குறைக்கலாம். ரத்தம் வழிதல் குழந்தைப் பருவத்தில் கண்டறியப்பட்டால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ரத்தம் வழிதல் குறைபாடு கொண்டவர்கள், பல் நீக்கம் மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டாக்டரிடம் அதுபற்றி முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். நெருங்கிய உறவில் திருமணம் செய்பவர் களின் வாரிசுகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இதைத் தவிர்க்க வேண்டும்.
காயம் ஏற்பட்டு உடலுக்கு வெளியே ரத்தக்கசிவு ஏற்படுவதுபோல, உடலுக்கு உள்ளேயே தோலின் அடியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிவந்ததுபோல மாற்றம் காணப்படுவதும், ஒருவகை ஹீமோபிலியாதான். இதுவும் ஆபத்தானதுதான். சிலருக்கு கொஞ்சம் கடினமான வேலைகள், பயிற்சிகள் செய்தாலே இந்த மாற்றங்களை தோலின் அடியில், மூட்டு இணைப்பு கள் உள்ள இடங்களில் காண முடியும்.
10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ரத்தம் உறையாமை பாதிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு இந்தக் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் கடந்த வருடம் வரை சுமார் 20 ஆயிரம் பேரே ஹீமோபிலியா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் இந்தப் பாதிப்பு, அதிகமானவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பில்லை என்பது ஆறுதலான விஷயம். அறிகுறி தென்படுபவர்கள் எச்சரிக்கையாக இருந்தால் உயிர்காக்க முடியும்.
கனடாவைச் சேர்ந்த பிராஞ்க் சன்னேபல் என்பவர் ரத்தம் உறையாமை பற்றி விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டார். அவரது பிறந்த நாளான (இன்று) ஏப்ரல் 17-ந் தேதி, உலக ஹீமோபிலியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பெரும் முயற்சிகள், ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அதுவரையில் விழிப்புடன் இருப்போம்; ஆபத்தை தவிர்ப்போம்.
Next Story






