search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூட்டு வலியை போக்கும் கை வைத்தியம்
    X

    மூட்டு வலியை போக்கும் கை வைத்தியம்

    மூட்டு வலிக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய கை வைத்திய முறைகளை கீழே பார்க்கலாம்.
    ஒரு காலத்தில் வயதான பெரியவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட மூட்டு வலி பிரச்சினை இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடியதாக உள்ளது. இந்த மூட்டுவலிக்கு கை வைத்தியம் என்னவென்று கீழே பார்க்கலாம்.

    1. நல்ல நடுத்தரமான உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின்காலையில் அந்தநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

    2. ஒருதேக்கரண்டி கறுப்பு எள்ளை கால்கோப்பை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

    3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெது வெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

    4. வெது வெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

    5. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் (இது ஒரு கால்நடை தீவனம்) விதைகளை ஒருகோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று - நான்கு முறைஅருந்தலாம்.

    6. இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்லபலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன்சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும்போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்துபலன் தராது.

    7. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

    உணவுப்பழக்கம் :

    * வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
    * கால்சியம் அதிகம் உள்ள பால், பால்சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

    தவிர்க்க வேண்டியவை : 

    காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மனஅழுத்தம்.
    Next Story
    ×