என் மலர்
ஆரோக்கியம்

உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்.
அக்னி வெயில் காலம் பெயரளவுக்கே முடிந்துள்ளது. இன்னும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்து எடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆகவே, வெப்பத்தில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கும் வெள்ளரியின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். நுரையீரல் கோளாறு, கபம், இருமல் உள்ளவர்கள் மட்டும் வெள்ளரிக்காயை தவிர்க்கவேண்டும். மற்றவர்களுக்கு வெள்ளரி மிகவும் நல்லது. இத்தகைய வெள்ளரியை பற்றி, அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
பசியை அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணும்போது பசிரசம் என்ற விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது. இது பித்தத்தை குறைக்கும்.
வெள்ளரிப்பிஞ்சு தொடர்ந்து சாப்பிடும்போது, புகை பிடிப்போரின் குடலை நிக்கோடின் தாக்குவதை குறைத்து நஞ்சை நீக்குகிறது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது, வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால், தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் ஆகிய அத்தனையும் வெள்ளரியில் உண்டு. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதியாக உள்ளது. ஈரல், கல்லீரல் ஆகியவற்றின் சூட்டைத் தடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக்கு உண்டு. நல்ல செரிமானத்தையும் தரும். மேற்கண்ட பயன்கள் அகத்துக்கு.
புறப்பயன்கள் என்றால், கண்கள் குளிர்ச்சியடைய வெள்ளரிக்காயை குறுக்கு வசம் அறுத்து இரண்டு துண்டுகள் எடுத்து கண்ணின் மேற்பகுதியில் சிறிது நேரம் வைத்திருந்தால் கண் குளிர்ச்சியடையும். அழகிய முகமும் வனப்பும் பெற வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களை விரட்டவும் வெள்ளரி சாலச்சிறந்தது. வெளிநாட்டில் இருந்து வரும் நிறைய கிரீம்கள் தயாரிப்பில் வெள்ளரியின் பயன்பாடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். நுரையீரல் கோளாறு, கபம், இருமல் உள்ளவர்கள் மட்டும் வெள்ளரிக்காயை தவிர்க்கவேண்டும். மற்றவர்களுக்கு வெள்ளரி மிகவும் நல்லது. இத்தகைய வெள்ளரியை பற்றி, அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
பசியை அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணும்போது பசிரசம் என்ற விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது. இது பித்தத்தை குறைக்கும்.
வெள்ளரிப்பிஞ்சு தொடர்ந்து சாப்பிடும்போது, புகை பிடிப்போரின் குடலை நிக்கோடின் தாக்குவதை குறைத்து நஞ்சை நீக்குகிறது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது, வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால், தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் ஆகிய அத்தனையும் வெள்ளரியில் உண்டு. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதியாக உள்ளது. ஈரல், கல்லீரல் ஆகியவற்றின் சூட்டைத் தடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக்கு உண்டு. நல்ல செரிமானத்தையும் தரும். மேற்கண்ட பயன்கள் அகத்துக்கு.
புறப்பயன்கள் என்றால், கண்கள் குளிர்ச்சியடைய வெள்ளரிக்காயை குறுக்கு வசம் அறுத்து இரண்டு துண்டுகள் எடுத்து கண்ணின் மேற்பகுதியில் சிறிது நேரம் வைத்திருந்தால் கண் குளிர்ச்சியடையும். அழகிய முகமும் வனப்பும் பெற வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களை விரட்டவும் வெள்ளரி சாலச்சிறந்தது. வெளிநாட்டில் இருந்து வரும் நிறைய கிரீம்கள் தயாரிப்பில் வெள்ளரியின் பயன்பாடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story