search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    முத்திரை
    X
    முத்திரை

    முத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கும்...

    கட்டை விரல் நெருப்பு எனவும், ஆள்காட்டி விரல் காற்று எனவும், நடுவிரல் ஆகாயம் எனவும், மோதிர விரல் நிலம் எனவும், சுண்டு விரல் நீர் எனவும் சொல்லப்படுகிறது.
    முத்திரை… இந்த வார்த்தையைக் கேட்டதும் சிலர் வேறுவிதமாக யோசிப்பார்கள். ஆனால், இது நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுக்கவும், வந்த நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படக்கூடிய ஒன்று என்பது சிலருக்கு புதிய தகவலாக இருக்கலாம்.

    மனித உடலானது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது. பஞ்ச மகா பூதம் எனப்படும் இவற்றில் ஒன்று சரியாக செயல்படவில்லையென்றாலும் பிரச்சினை ஏற்படும். இப்படிப்பட்ட சூழலில் முத்திரை செய்தால் பலன் கிடைக்கும். முத்திரை என்பது யோகா, பிராணாயாமம், தியானம், பரதநாட்டியம் செய்யும்போது கைவிரல்களை அழுத்திப்பிடிக்கும் ஒரு நிலையாகும். இந்த முத்திரையைச் செய்வதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். நரம்பு மண்டலம் வழியாக ஆற்றல் தூண்டப்படும்; மனம் மற்றும் உடல்ரீதியாக ஆற்றல் குறையும்போது முத்திரை செய்தால் செல்கள் புதுப்பிக்கப்பட்டு உடலியக்கம் சீராகும்.

    நம் கை மற்றும் காலில் உள்ள ஒவ்வொரு விரலும் இந்த பஞ்ச மகா பூதங்களின் வரிசையில்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது. கட்டை விரல் நெருப்பு எனவும், ஆள்காட்டி விரல் காற்று எனவும், நடுவிரல் ஆகாயம் எனவும், மோதிர விரல் நிலம் எனவும், சுண்டு விரல் நீர் எனவும் சொல்லப்படுகிறது. ஆக ஒவ்வொரு விரல்களுக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. எனவே, அந்தந்த ஆற்றல்களுக்குரிய முறைகளுடன் விரல்களின் நுனிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து முத்திரை செய்தால் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் சமநிலைக்கு வரும்.

    எப்போதெல்லாம் ஆற்றல் தேவைப்படுகிறதோ அப்போது இந்த முத்திரைகளைச் செய்து பலன் பெறலாம். முத்திரைகளைச் செய்வதால் மன ஆற்றல் மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும். மேலும் குறிப்பாக மனரீதியான பிரச்சினைகளைப் போக்க இந்த முத்திரை உதவும்.
    Next Story
    ×