search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பர்வத ஆசனம்
    X
    பர்வத ஆசனம்

    இடுப்பு பகுதி ஊளைச்சதையை கரைக்கும் பர்வத ஆசனம்

    பர்வத ஆசனம் செய்வதால் தோள்கள் வலிமையடையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும். உடல் எடை குறையும்.
    முதலில் விரிப்பில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்திக் கொண்டு அமர வேண்டும். வலது காலை இடது தொடை பக்கமாகவும், இடது காலை வலது தொடை பக்கமாகவும் மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். அதாவது பத்மாசன முறையில் உட்கார்ந்து கொண்டு பின்பு 2 கைகளையும் தரையில் நன்றாக அழுத்தியவாறு 2 கால் முட்டிகளையும் ஊன்றி நிற்க வேண்டும்.

    பின்னர் மெதுவாக உடலை மேல் நோக்கி தூக்கி 2 கைகளையும் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும். இதுதான் பர்வத ஆசன முறை ஆகும். இந்த ஆசனத்தை முதலில் சுவரை ஒட்டிய நிலையில் பயிற்சி செய்யலாம்.

    நன்றாக பயிற்சி செய்த பின்னர் வழக்கமான இடத்தில் செய்யலாம். மூட்டு வலி உள்ளவர்கள் வலி இருக்கும் போது இந்த ஆசனத்தை செய்ய கூடாது. பயிற்சியை முடித்த பின்னர் கால்களை நீட்டி மடக்கி 5 முறை செய்வது நல்லது. இப்படி செய்து வந்தால் மூட்டு வலி வருவது தடுக்கப்படுகிறது.
    Next Story
    ×