என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
![கழுத்து, தொண்டைப்பகுதியை பாதுகாக்கும் உதான முத்திரை கழுத்து, தொண்டைப்பகுதியை பாதுகாக்கும் உதான முத்திரை](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011132397825_Neck-throat-and-protecting-UDANA-MUDRA_SECVPF.gif)
X
கழுத்து, தொண்டைப்பகுதியை பாதுகாக்கும் உதான முத்திரை
By
மாலை மலர்1 Feb 2017 6:02 AM GMT (Updated: 1 Feb 2017 6:02 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியைப் பாதுகாக்க உதவுகிறது உதான முத்திரை. இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உதானம் என்றால் மேலே நோக்குதல் என்று அர்த்தம். உடலில் தலையே பிரதானம். அதைத் தாங்கிப்பிடிப்பது கழுத்து. இந்தக் கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியைப் பாதுகாக்க உதவுகிறது உதான முத்திரை. மேல் நோக்கு வாயுவைக் கட்டுப்படுத்தும். அதாவது, கீழிருந்து மேல்நோக்கி வரும் ஏப்பம், வாந்தி, குமட்டல், சளித் தொந்தரவு, விக்கல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.
செய்முறை :
கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நீட்டி இருக்கட்டும். தரையில் சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்கள் பதிந்த படியோ 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள் :
தலையில் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்கிறது. இதன் அடையாளமாக, முகம் பொலிவடைவதைக் காணலாம்.
மனஅழுத்தத்தால் ஏற்படும் கழுத்து, தாடை, முக இறுக்கம் சரியாகும்.
குறைவான தைராய்டு சுரப்பால் (Hypothyroid) உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, சீரற்ற மாதவிலக்கு, முடி உதிர்தல், தொண்டையில் கட்டி, வீக்கம் ஆகிய பிரச்னைகளுக்குத் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்திட நல்ல மாற்றம் தெரியும்.
பின் கழுத்து தடிமனாக வீங்கி இருத்தல், முன் கழுத்தும் பின் கழுத்தும் சேர்ந்து வளையமாக வீங்கி இருத்தல், கழுத்துப்பட்டை கறுப்பாக இருத்தல், கழுத்து இறுக்கம் ஆகியவை குணமாக, இதை மூன்று மாதங்கள் செய்ய வேண்டும்.
மூச்சுத் திணறல் குறையும். நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும்.
செய்முறை :
கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நீட்டி இருக்கட்டும். தரையில் சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்கள் பதிந்த படியோ 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள் :
தலையில் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்கிறது. இதன் அடையாளமாக, முகம் பொலிவடைவதைக் காணலாம்.
மனஅழுத்தத்தால் ஏற்படும் கழுத்து, தாடை, முக இறுக்கம் சரியாகும்.
குறைவான தைராய்டு சுரப்பால் (Hypothyroid) உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, சீரற்ற மாதவிலக்கு, முடி உதிர்தல், தொண்டையில் கட்டி, வீக்கம் ஆகிய பிரச்னைகளுக்குத் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்திட நல்ல மாற்றம் தெரியும்.
பின் கழுத்து தடிமனாக வீங்கி இருத்தல், முன் கழுத்தும் பின் கழுத்தும் சேர்ந்து வளையமாக வீங்கி இருத்தல், கழுத்துப்பட்டை கறுப்பாக இருத்தல், கழுத்து இறுக்கம் ஆகியவை குணமாக, இதை மூன்று மாதங்கள் செய்ய வேண்டும்.
மூச்சுத் திணறல் குறையும். நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)