என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தோள்பட்டையை வலுவாகும் அதோமுக ஸ்வானாசனம்
    X

    தோள்பட்டையை வலுவாகும் அதோமுக ஸ்வானாசனம்

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கணுக்கால்கள், தோள்பட்டைகள் வலுவாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    இது நாயின் முகம் கீழ் நோக்கியவாறு உள்ளது போன்ற அமைப்பினை கொண்டதால் இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது.

    செய்முறை :

    குப்புறப்படுத்துக் கால்களை நீட்டி, உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முன்னோக்கி வைக்கவும்.

    மூச்சை வெளிவிட்டு உடலை மேலே உயர்த்தவும் தலையைப் பாதங்களைப் பார்க்குமாறு திருப்பி உச்சந்தலையைத் தரையில் பதிக்கவும்.

    முழங்கால்களை மடக்காமல் உள்ளங்கால்களை முன்பாக வைத்து முழுப் பாதமும் தரையில் வைத்து உடலின் எடை கால்கள் மற்றும் தலையில் இருப்பது போல் செய்யவும்.

    இந்நிலையில் ஆழமாகச் சுமார் ஒரு நிமிடம் சுவாசித்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யவும்.

    பலன்கள் :

    விளையாட்டு வீரர்களின் களைப்பைப் போக்கும்.

    கணுக்கால்கள், தோள்பட்டை வலுப்பெறுகின்றன.

    இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும்.

    இதயம் சரிவரச் செயல்படுகிறது.

    குறிப்பு :

    கர்ப்பிணி இதை செய்வதை தவிர்க்கவும். கை மற்றும் கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் இந்தி செய்வதை தவிர்க்கலாம்.
    Next Story
    ×