என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்

X
குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த உணவு பதார்த்தங்களை கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த உணவு பதார்த்தங்களை கொடுக்கலாமா?
By
மாலை மலர்18 Feb 2021 3:08 AM GMT (Updated: 18 Feb 2021 3:08 AM GMT)

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் சர்க்கரை கொடுக்கக்கூடாது.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. குறிப்பாக சர்க்கரை கலந்த உணவு பதார்த்தங்களை கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
ஆப்பிள் சாப்பிட்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்ற எண்ணம் பெற்றோரிடம் இருக்கிறது. ஆப்பிளை மென்று சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு அதனை ஜூஸ் ஆக்கி கொடுக்கிறார்கள். அதை எப்படியாவது பருக வைத்துவிட வேண்டும் என்பதற்காக அதில் சர்க்கரையை கலந்து கொடுக்கிறார்கள். அது தவறான பழக்கம். குழந்தைகளுக்கு சர்க்கரை ஏற்றதல்ல. சிறுவயது முதலே சர்க்கரையை பயன்படுத்தும்போது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் எதிர் காலத்தில் உருவாகும்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் சர்க்கரை கொடுக்கக்கூடாது. குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் வழக்கமும் நிறைய பெற்றோரிடம் இருக்கிறது. அதை சிறிதாவது கொடுத்தால்தான் எந்த உணவாக இருந்தாலும் குழந்தை சாப்பிடும் என்ற நிலையை ஏற்படுத்திவிடுவார்கள். தேனில் அதிக அளவு பிரக்டோஸ் சேர்ந்திருக்கிறது. அது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஒருவயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு அறவே தேன் கொடுக்கக் கூடாது. குளிர் பானங்களையும் பருக கொடுக்கக்கூடாது. 500 மி.லி. அளவு கொண்ட குளிர் பானத்தில் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது.
செயற்கை வண்ணங்கள், சுவை நிறமிகள் சேர்க்கப்பட்ட பானங்கள் மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கொடுக்கக் கூடாது. அத்தகைய உணவுகள் தலைவலி, மனநிலையில் மாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்திருக்கும் நைட்ரேட்டுகள் புற்றுநோயுடன் தொடர்புடையவை. நிறைய குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். நூடுல்ஸ் அரிசி மாவில் தயாரிக்கப்படுகிறது. அரிசி மாவு எளிதில் குளுக்கோஸாகவும் பின்னர் கொழுப்பாகவும் மாறும் தன்மை கொண்டது. அதனால் அதிகம் சாப்பிட அனுமதிக்கக்கூடாது.
பாலாடைக்கட்டியையும் அதிகம் சாப்பிட அனுமதிக்கக்கூடாது. அவை குழந்தைகளிடம் இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும். ஹார்மோன் சுரப்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
ஆப்பிள் சாப்பிட்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்ற எண்ணம் பெற்றோரிடம் இருக்கிறது. ஆப்பிளை மென்று சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு அதனை ஜூஸ் ஆக்கி கொடுக்கிறார்கள். அதை எப்படியாவது பருக வைத்துவிட வேண்டும் என்பதற்காக அதில் சர்க்கரையை கலந்து கொடுக்கிறார்கள். அது தவறான பழக்கம். குழந்தைகளுக்கு சர்க்கரை ஏற்றதல்ல. சிறுவயது முதலே சர்க்கரையை பயன்படுத்தும்போது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் எதிர் காலத்தில் உருவாகும்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் சர்க்கரை கொடுக்கக்கூடாது. குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் வழக்கமும் நிறைய பெற்றோரிடம் இருக்கிறது. அதை சிறிதாவது கொடுத்தால்தான் எந்த உணவாக இருந்தாலும் குழந்தை சாப்பிடும் என்ற நிலையை ஏற்படுத்திவிடுவார்கள். தேனில் அதிக அளவு பிரக்டோஸ் சேர்ந்திருக்கிறது. அது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஒருவயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு அறவே தேன் கொடுக்கக் கூடாது. குளிர் பானங்களையும் பருக கொடுக்கக்கூடாது. 500 மி.லி. அளவு கொண்ட குளிர் பானத்தில் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது.
செயற்கை வண்ணங்கள், சுவை நிறமிகள் சேர்க்கப்பட்ட பானங்கள் மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கொடுக்கக் கூடாது. அத்தகைய உணவுகள் தலைவலி, மனநிலையில் மாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்திருக்கும் நைட்ரேட்டுகள் புற்றுநோயுடன் தொடர்புடையவை. நிறைய குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். நூடுல்ஸ் அரிசி மாவில் தயாரிக்கப்படுகிறது. அரிசி மாவு எளிதில் குளுக்கோஸாகவும் பின்னர் கொழுப்பாகவும் மாறும் தன்மை கொண்டது. அதனால் அதிகம் சாப்பிட அனுமதிக்கக்கூடாது.
பாலாடைக்கட்டியையும் அதிகம் சாப்பிட அனுமதிக்கக்கூடாது. அவை குழந்தைகளிடம் இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும். ஹார்மோன் சுரப்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
