search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெயில் காலத்தில் குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் போது கவனிக்க வேண்டியவை
    X
    வெயில் காலத்தில் குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் போது கவனிக்க வேண்டியவை

    வெயில் காலத்தில் குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் போது கவனிக்க வேண்டியவை

    குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறோம் என்றால் சில வழிமுறைகளை பின்பற்றலாம். இதனால் குழந்தைக்கு வெயிலினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்து கொள்ளலாம்.
    சாதாரணமா சூரியக்கதிர்களிடமிருந்து நம்மை காத்துகொள்ளவே பெரும் பாடுபடுகிறோம். இதுல குழந்தைகளை வெயில்ல வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பா குழந்தையைத்தான் அதிகமா இந்த சூரியக்கதிர்கள் தாக்கும். எனவே குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறோம் என்றால் சில வழிமுறைகளை பின்பற்றலாம். இதனால் குழந்தைக்கு வெயிலினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்து கொள்ளலாம்.

    பொதுவாக இது அன்னவருக்குமே சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நாம் வெளில செல்கிறோம் என்றால் கண்டிப்பா ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து செல்வது மிகவும் அவசியம். அதுவும் குழந்தைகளை அழைத்து கொண்டு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் நல்லது.

    ஏனென்றால் வெயில் காலத்தில் வெளியே செல்கிறோம் என்றால் வெயிலின் தாக்குதலால் உடலில் இருக்கும் நீர்சத்தை குறைத்து உடலை வறட்சியடைய வழிவகுக்கிறது. எனவே குழந்தையை வெளியே அழைத்து செல்லும் பொது கண்டிப்பாக ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள். குழந்தையின் ஆரோக்கியத்தை காக்கக்கூடிய மற்றும் குழந்தையின் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழச்சாறினை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.

    குழந்தை வெயிலில் வெளியே சென்று வந்தால் ஒரு கிளாஸ் ஜூஸ் தரலாம். இவ்வாறு தருவதனால் குழந்தையின் உடல் வெப்பத்தை கண்டிப்பாக தணிக்க உதவும்.

    வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.

    குழந்தையை வெயில்காலத்தில் வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் எரிச்சலுட்டகூடிய எந்த ஆடையையும் அணிவதை இன்றுடன் தவிர்த்து கொள்ளவும். அதற்கு பதிலாக காட்டன் ஆடைகளை அணிவிப்பது மிகவும் நம்மையாகும். வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்

    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குள் புகட்டாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    விளையாடி விட்டு சோர்வாக வரும் குழந்தைக்கு ஈரத்துணியால் துடைத்து விடவும் அல்லது சின்ன டப்பில் தண்ணீர் நிரப்பி குழந்தையின் பாதம் நனையும் படி நிக்க வையுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் உடலின் வெப்பம் மெல்ல மெல்ல குறையும்.

    குழந்தைக்கும் வேர்க்கும் என்பதால் குழந்தை இருக்கும் இடத்தில் மிதமான காற்று சுழற்சி இருக்கவேண்டும். குறிப்பாக குழந்தையின் முகத்திற்கு நேராக காத்தாடியை வேகமாக சுத்தவிடக்கூடாது ஏன்னென்றால் குழந்தை சுவாசிக்க மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுதிணறல்  ஏற்படும்.
    Next Story
    ×