என் மலர்

    ஆரோக்கியம்

    சுவையான உருளைக்கிழங்கு கார போளி செய்வது எப்படி
    X

    சுவையான உருளைக்கிழங்கு கார போளி செய்வது எப்படி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உருளைக்கிழங்கு போளி மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - அரை கிலோ
    கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 ஒரு மேஜைக்கரண்டி
    முந்திரி பருப்பு - 10
    மைதா மாவு - 2 கப்
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    நெய் - தேவைக்கு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    * கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு நன்றாக வறுத்த பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கிளறி இறக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக போளி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடோற்றவும்.



    * ஒரு உருண்டை எடுத்து வாழை இலையில் மெலிதாக தட்டி நடுவில் பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டி, தவாவில் போட்டு சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு போளியை சுட்டு எடுக்கவும்.

    * சுவையான உருளைக்கிழங்கு போளி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×