என் மலர்
ஆரோக்கியம்

சுவையான பச்சை மிளகாய் பச்சடி
இட்லி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையான பச்சை மிளகாய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பச்சைமிளகாய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தனியா தூள் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் (பொடித்தது) - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 மேஜைக்கரண்டி
செய்முறை :
* பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
* தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்து வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்தபின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், தனியா பொடி, மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
* மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சடி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
* காரம் அதிகமாக இருந்தால் கூடுதலாக வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
* சுவையான மிளகாய் பச்சடி ரெடி.
* பச்சை மிளகாய் பச்சடியை பிரிஜ்ஜில் வைத்து சில நாட்கள் வரை கெடாமல் உபயோகிக்கவும். இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சைமிளகாய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தனியா தூள் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் (பொடித்தது) - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 மேஜைக்கரண்டி
செய்முறை :
* பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
* தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்து வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்தபின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், தனியா பொடி, மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
* மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சடி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
* காரம் அதிகமாக இருந்தால் கூடுதலாக வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
* சுவையான மிளகாய் பச்சடி ரெடி.
* பச்சை மிளகாய் பச்சடியை பிரிஜ்ஜில் வைத்து சில நாட்கள் வரை கெடாமல் உபயோகிக்கவும். இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story