என் மலர்
ஆரோக்கியம்

உடலுக்கு வலிமை தரும் நெஞ்செலும்பு சூப்
சூப் உடலுக்கு வலிமைத்தரக்கூடியது. அதிலும் நெஞ்செலும்பு சூப் உடல் பலவீனமானவர்கள், குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள் :
நெஞ்செலும்பு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2 நறுக்கியது
துவரம் பருப்பு - அரை கப்
சீரகம், மிளகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - சிறிது
தாளிக்க :
இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
* நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.
* இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் எலும்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சத்தான எலும்பு சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நெஞ்செலும்பு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2 நறுக்கியது
துவரம் பருப்பு - அரை கப்
சீரகம், மிளகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - சிறிது
தாளிக்க :
இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
* நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.
* இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் எலும்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சத்தான எலும்பு சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story