search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பேச்சுலர்களுக்கான சிக்கன் குருமா செய்வது எப்படி
    X

    பேச்சுலர்களுக்கான சிக்கன் குருமா செய்வது எப்படி

    சிக்கன் குருமாவின் செய்முறையைப் படித்து, செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 250 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 1/4 கப்
    பச்சை மிளகாய் - 1
    சோம்பு - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்
    முந்திரி - 3

    தாளிப்பதற்கு

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    பூண்டு - 6 பற்கள்

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியா வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி, பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, வறுத்து ஆறவைத்து அத்துடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு தூவி 7 நிமிடம் வதக்கிய, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் குருமா ரெடி!!!

    - உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×