search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மட்டன் இரத்த பொரியல் செய்வது எப்படி
    X

    மட்டன் இரத்த பொரியல் செய்வது எப்படி

    மட்டன் இரத்தம் மிகவும் சத்தானது. இதனை பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் இரத்தம் - 2 கப்
    சின்ன வெங்காயம் - 75 கிராம்
    ப.மிளகாய் - 4
    சீரகம் - 1 ஸ்பூன்
    தேங்காய் துருவல் - கால் கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - சுவைக்கு

    செய்முறை :

    * வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டன் இரத்தத்தை தண்ணீரில் அலசி ஒரு மண் சட்டியில் போட்டு நன்றாக பிசையவும்.

    * பின்னர் அதனுடம் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து நன்றாக மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

    * அனைத்தும் நன்றாக கலந்த பின் அடுப்பில் வைத்து சூடாக்கவும். அடிபிடிக்காமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * இரத்தத்தில் இருக்கும் தண்ணீர் வற்றி உதிரியாக வரும் போது தேங்காய் துருவலை போட்டு இறக்கி பரிமாறவும்.

    குறிப்பு :

    * இதில் எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. தேங்காய் துருவல் போடும் போது உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.

    * நெல்லை மாவட்ட பகுதிகளில் இவ்வாறு தான் இரத்த பொரியல் செய்வார்கள்.

    * மட்டன் இரத்தத்தில் ஆட்டின் முடி இ ருக்கும். அதனால் நன்றாக பார்த்து தண்ணீரில் அலசி செய்ய வேண்டும்.

    - உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×