என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இனிப்பான கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி
Byமாலை மலர்6 May 2016 8:57 AM GMT (Updated: 6 May 2016 8:58 AM GMT)
கேரட் பாதாம் கீர் செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள்.
தேவையான பொருள்கள் :
பால் - 3 கப்
சர்க்கரை - முக்கால் கப்
கேரட் - 3
பாதாம் பவுடர் - 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ - 2 இதழ்
பாதாம், முந்திரி - சிறிதளவு
செய்முறை :
* கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாலைக் காய்ச்சி வைக்கவும்.
* காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.
* மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும்.
* அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.
* பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்
* சுவையான கேரட் பாதாம் கீர் தயார்.
* பாதாம், முந்திரி, குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.
* கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட், டிரை ஃப்ரூட்ஸ், பேரீச்சம்பழம் என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.
- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் - 3 கப்
சர்க்கரை - முக்கால் கப்
கேரட் - 3
பாதாம் பவுடர் - 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ - 2 இதழ்
பாதாம், முந்திரி - சிறிதளவு
செய்முறை :
* கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாலைக் காய்ச்சி வைக்கவும்.
* காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.
* மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும்.
* அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.
* பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்
* சுவையான கேரட் பாதாம் கீர் தயார்.
* பாதாம், முந்திரி, குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.
* கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட், டிரை ஃப்ரூட்ஸ், பேரீச்சம்பழம் என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.
- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X