search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இனிப்பான கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி
    X

    இனிப்பான கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி

    கேரட் பாதாம் கீர் செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள்.
    தேவையான பொருள்கள் :

    பால் - 3 கப்
    சர்க்கரை - முக்கால் கப்
    கேரட் - 3
    பாதாம் பவுடர் - 2 மேசைக்கரண்டி
    குங்குமப்பூ - 2 இதழ்
    பாதாம், முந்திரி - சிறிதளவு

    செய்முறை :

    * கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பாலைக் காய்ச்சி வைக்கவும்.

    * காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.

    * மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும்.

    * அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.

    * பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்

    * சுவையான கேரட் பாதாம் கீர் தயார்.

    * பாதாம், முந்திரி, குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

    * கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட், டிரை ஃப்ரூட்ஸ், பேரீச்சம்பழம் என்று எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.

    - உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×