search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    பிரேசிலை வீழ்த்தியும் பலனில்லை - உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது கேமரூன்
    X

    பந்தை தடுக்கும் முயற்சியில் இரு அணி வீரர்கள்

    பிரேசிலை வீழ்த்தியும் பலனில்லை - உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது கேமரூன்

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் கேமரூன் அணி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் பிரேசில், கேமரூன் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தது.

    இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதி. இதில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபுபெக்கர் 92-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.

    பிரேசில் அணி தோல்வி அடைந்தாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    Next Story
    ×