search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலய  பஞ்சமூர்த்திகள் வீதியுலா உற்சவம்
    X

    வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலய பஞ்சமூர்த்திகள் வீதியுலா உற்சவம்

    • 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வில்லியனூர் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் ஆலய தேரோட்ட பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது.

    நேற்று 6-ம் நாள் உற்சவம் நடைபெற்றது. காலையில் 63 நாயன்மார்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வன்னியர் பாதுகாப்பு தலைவர் செந்தில்கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முக்கிய விழாவான தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வன்னியர் மடம் தனி அதிகாரி ராமதாஸ் மற்றும் ஆலய சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×