என் மலர்
வழிபாடு

ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம முறை
- 2021-ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி நடைபெற்றது.
- இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்தவரை ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதத்தில் முன்கூட்டியே வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
மார்கழியில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. பொதுவாக மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்சவமும் கொண்டாடப்படும். சில சமயங்களில் மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில்தான் பரமபத வாசலும் திறக்கப்பட்டது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.