search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கலி வேட்டை
    X

    உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கலி வேட்டை

    • அன்பு கொடி மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.
    • ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு நாராயண சாமி கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 3 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 5 மணிக்கு பணிவிடை போன்றவை நடந்தது.

    மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். அப்போது அய்யாவின் அன்பு கொடி மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    இரவு 10 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் எம். தங்ககிருஷ்ணன் தலைமையில், ஊர் நிர்வாகிகள், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள், ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×