search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரம்மேற்சவ விழா 3-வது நாள்:சிம்ம, முத்துப்பந்தல் வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் வீதிஉலா
    X

    பிரம்மேற்சவ விழா 3-வது நாள்:சிம்ம, முத்துப்பந்தல் வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் வீதிஉலா

    • சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி திருப்ராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    Next Story
    ×