search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: சர்வபூபால, கருட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் உலா
    X

    பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: சர்வபூபால, கருட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் உலா

    • இன்று சூரிய பிரபை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை 'வெண்ணெய் ஸ்ரீகிருஷ்ணர்' அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். மதியம் 12 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து மாலை 4.20 மணியில் இருந்து மாலை 5.20 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் குழுமியிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள் பாலித்தார். இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    Next Story
    ×