search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பள்ளிவேட்டை
    X

    துரியோதன வதம் கதகளியை படத்தில் காணலாம்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பள்ளிவேட்டை

    • இன்று இரவு 7 மணிக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது.
    • இன்று நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி பல்லக்கில் பவனி வருதல், துரியோதனன் வதம், கதகளி ஆகியவை நடந்தது.

    நேற்று பக்தி இன்னிசை, சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், பாலிவதம் கதகளி ஆகியவை நடைபெற்றது.

    நேற்று (திங்கட்கிழமை) நாதஸ்வர கச்சேரி, சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளலும், நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.

    Next Story
    ×