என் மலர்

    வழிபாடு

    திருத்தணி முருகன் கோவிலில் 30-ந்தேதி புஷ்பாஞ்சலி நடக்கிறது
    X

    திருத்தணி முருகன் கோவிலில் 30-ந்தேதி புஷ்பாஞ்சலி நடக்கிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது.
    • திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பதில் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது. இதையொட்டி தினந்தோறும் மூலவர் முருகப்பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 30-ந்தேதி மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், 31-ந்தேதி காலையில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

    அறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழா நடை பெறும் நாட்களில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தேவாரபாராயணம் நடைபெறுகிறது.

    Next Story
    ×