search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றம் கோவிலில் தேங்காய் தொடும் முகூர்த்தம்
    X

    திருப்பரங்குன்றம் கோவிலில் தேங்காய் தொடும் முகூர்த்தம்

    • மார்ச் 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • மார்ச் 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவிற்காக தேதி குறித்த தேங்காய் தொடும் முகூர்த்தம் நடைபெற்றது. கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமை தாங்கினார். கோவில் உள்துறை சூப்பிரண்டு ரஞ்சனி, அலுவலக சூப்பிரண்டு சுமதி முன்னிலை வகித்தனர்.

    கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க அலுவலகத்திற்கு பூ, மாலை, தேங்காய், பழங்களுடன்கோவில் ஸ்தானிக சிவாச்சாரிகள் மு.சுவாமிநாதன், ராஜா என்ற சந்திரசேகர், சொக்கு சுப்பிரமணியம், சண்முகசுந்தரம், சிவானந்தம் ரமேஷ், செல்லப்பா ஆகியோர் சென்றனர். அங்கு பங்குனி பெருவிழாவிற்கான தேதி குறிக்ககூடிய தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது.

    அதில் வருகின்ற மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் திருவிழா நடத்துவது என்று பேசப்பட்டது. திருவிழாவையொட்டி மார்ச் மாதம் 26-ந்தேதி கொடியேற்றம், ஏப்ரல் மாதம் 7-ந் தேதி பட்டாபிஷேகம், 8-ந்தேதி திருக்கல்யாணம், 9-ந்தேதி தேரோட்டம் என்று நாட்கள் குறிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வாசல் முன்பு நிலைநிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் தயார்படுத்தும் பொருட்டாக மூடப்பட்டுள்ள தேரின் ஒரு பகுதியை திறக்கப்பட்டு தேரில் உள்ள ஆறுமுகப் பெருமானுக்கு (தராசுகாரர்) தேர்தொடும் முகூர்த்தம் நடந்தது.

    Next Story
    ×