search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா

    • இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர விழா இன்று நடக்கிறது
    • அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் "பூரம்"விழா விசேஷமாகும். ஒவ்வொரு ஆண்டும ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூரம் விழாவும், ஆடிமாதத்தில் ஆடிப்பூர விழாவுமாக ஒரு ஆண்டிற்கு 2 பூர விழா கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பூர விழாவில் தெய்வானை அம்பாளும், ஆடிப்பூர விழாவில் கோவர்த்தனம்பிகையும் எழுந்தருளி நகர் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி மாலை 6.30 மணியளவில் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து திருவாட்சி மண்டபத்திற்கு சர்வ அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருளுகிறார். அங்கு கோவர்த்தனாம்பிக்கைக்கு நெய்வேத்தியங்கள் படைத்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் திருவாட்சி மண்டபத்தில் அம்பாள் புறப்பட்டுநகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடந்த காலங்களில் ஆடிப்பூரத்தன்று உற்சவர் சன்னதியில் இருந்து அம்பாள் புறப்பட்டு நேரடியாக நகர் உலா வந்து அருள்பாலித்தார். ஆனால் இந்த ஆண்டில் முதல்முறையாக உபயதாரர் மூலமாக திருவாட்சி மண்டபத்தில் மண்டகப்படி அமைத்து அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×