என் மலர்
வழிபாடு

கோவில்பத்து சிவன்கோவில் உடையார் குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விழா
- குளத்தில் ஐயப்ப விக்கிரகத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
- குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் சிவன் கோவில் எதிரில் உடையார் குளம் உள்ளது. இந்த குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஐயப்ப குருசாமி தங்கமணி தலைமை தாங்கினார். ஐயப்ப குருசாமி கள் அப்பாராசு, குணசேகரன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கோவில் குளத்தில் ஐயப்ப விக்கிரகத்திற்கு பன்னீர், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஐயப்ப குருசாமிகள்அனைவரும் கோவில் குளத்தில் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
இதில் ஐயப்ப குருசாமிகள் மணியரசன், இளையராஜா, சதீஷ், மணிகண்டன், விஜி, அம்பிகா, பாரதி, ஜெயகாந்த், மனோகர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






