search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செங்கல்பட்டு குமாரவாடி கோ ஆலயத்தில் மகாலட்சுமி ஹோமம் 15-ந்தேதி நடக்கிறது
    X

    செங்கல்பட்டு குமாரவாடி கோ ஆலயத்தில் மகாலட்சுமி ஹோமம் 15-ந்தேதி நடக்கிறது

    • ஸ்ரீசுதர்சன ஹோமம் மற்றும் விசேஷ கோ பூஜை நடக்கிறது.
    • இங்கு பக்தர்களின் நவக்கிரக தோஷங்கள் நீங்கவும் பரிகாரம் செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டு அருகே உள்ள குமார வாடியில் புகழ்வாய்ந்த கோ ஆலயம் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று மக்கள் வாழ்வில் செல்வம் கொழிக்கவும், உடல் ஆரோக்கியம், நோயற்ற வாழ்வு மற்றும் மன நிம்மதி பெற ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 15-ந்தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டில் மக்களின் வாழ்வு வளம் பெறவும், அளவில்லாத செல்வம் பெருகவும் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது.

    மக்கள் உடல் பிணியில் இருந்து விடுபட்டு சுகாதாரமான, ஆரோக்கியமான, மன நிம்மதியான வாழ்வு பெற தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. இங்கு பக்தர்களின் நவக்கிரக தோஷங்கள் நீங்கவும் பரிகாரம் செய்யப்படுகிறது.

    இதற்காக ஸ்ரீசுதர்சன ஹோமம் மற்றும் விசேஷ கோ பூஜை நடக்கிறது. அனைத்து ஹோமங்களும் 15 -ந்தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.

    ஹோமத்தில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×