search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நாளை நடக்கிறது
    X

    சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நாளை நடக்கிறது

    • ஊர்வலத்தை தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
    • நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெறுகிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்கதர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்துக்குடை ஊர்வலம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு தலைமைப்பதியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு தலைமைப்பதி முன்பு இருந்து முத்துக்குடைகள், மேளதாளங்கள் முன்செல்ல முத்துக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலத்தை தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

    டாக்டர் வைகுந்த் ஊர்வலத்திற்கு தலைமை தாங்குகிறார். பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், பையன் நேம்ரிஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஊர்வலமானது சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைகிறது.

    ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெறுகிறது. நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைந்ததும் முட்டப்பதி பால்கடலில் பதமிட்டு அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, உச்சி படிப்பு, அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. பின்னர், ஊர்வலம் மீண்டும் மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொற்றையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமைபதியை வந்தடைகிறது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×