என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
புனித தோமையார் ஆலய ஆண்டு திருவிழா
- கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும், சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது.
- புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.
அவினாசி – சேவூர் சாலையில் உள்ள புனித தோமையார் கத்தோலிக்க தேவாலயத்தில் ஆண்டு திருவிழா நேற்றுமாலை நடந்தது. முன்னதாக கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுத்திருவிழா தொடங்கியது. நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காலை 8.30 மணிக்கு கோவை நல்லாயன் குருத்துவ கல்லுாரி பேராசிரியர் லாரன்ஸ் தலைமையில் தேவாலய பங்கு குரு கென்னடி முன்னிலையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது.
திருப்பலி முடிவில், திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. பின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பாண்டு வாத்தியம் முழங்க, புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.
முன்னதாக கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும், சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு குரு, பங்கு பேரவையினர், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்