search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 30-ந்தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    நாகர்கோவில் ஏ.ஆர். கேம்ப் சாலையில் புனித அல்போன்சா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பெவ்வத்துபறம்பில் திருவிழா கொடியை ஏற்றி வைத்து ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை சாமி மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவின் 28-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 9 மணிக்கு சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருட்தந்தை தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள், திருப்பலி நிறைவேற்றினார். 10.30 மணிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்வுகள், மாலை 6 மணிக்கு பேரருட்தந்தை கிறிஸ்துதாஸ் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். இதில் நாகர்கோவில் திரு இருதய ஆலய பங்குத்தந்தை ஜாண் கென்னடி, குழித்துறை மறைமாவட்ட அருட்தந்தை டேவிட் மைக்கிள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    29-ந்தே 6 மணிக்கு அருட்தந்தை ஆன்டணி மாடப்புரைக்கல் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு படந்தாலுமூடு திரு இருதய மறைவட்ட ஆலய பங்குத்தந்தை தோமஸ் சத்யநேசன் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மேலபெருவிளை புனித ஜெபமாலை மாதா ஆலய பங்குத்தந்தை குரூஸ் கார்மல் மறையுரையாற்றினார். இரவு 8.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட சீனாய் தியானக்குழு அருட்தந்தை அனில்ராஜ் தலைமையில் நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு இடுக்கி மறைமாவட்ட ஆயர் ஜாண் நெல்லிக்குந்நேல் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 12.30 மணிக்கு தேர்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4.30 மணிக்கு அருட்தந்தைகள் பிரின்ஸ் சேரிப்பனாட்டு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்தந்தை அஜின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை புனித அல்போன்சா திருத்தல அதிபர் சனில் ஜோண் பந்திச்சிறக்கல், துணை பங்குத்தந்தை ஜார்ஜ் கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தரப்பேல், ராஜையன், ஜோ பெலிக்ஸ் மலையில் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×