என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை கொடியேற்றம்
- 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுகிறது.
- தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இந்த திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆண்டாள் கோவில் தேரின் மேல் பகுதியில் இதுவரை மூங்கில் கொண்டு கொடுங்கைகள் இருந்தன.
இதையடுத்து இரும்புகளை கொண்டு கொடுங்கை புதிதாக அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது. இந்த கொடுங்கைகளை ராஜபாளையம் ராம்கோ நிறுவனம் சார்பில் அமைத்து தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அந்த கொடுங்கைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டு தேரில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஆண்டாள் கோவிலை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டாள் கோவில் தேரில் இதற்கு முன்பு இருந்த கொடுங்கைகள் மூங்கிலால் ஆனது. இதனை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ராம்கோ நிறுவனத்தினர் இரும்பினால் கொடுங்கைகளை செய்து கொடுத்துள்ளது. அது பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பல ஆண்டுகளுக்கு சேதமடையாமல் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்