search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவபெருமான் அமுது உண்ட இடம்
    X

    சிவபெருமான் அமுது உண்ட இடம்

    உலகிலேயே சிவபெருமான் அமுது உண்ட ஒரே இடம் காரைக்கால் அம்மையார் எனும் புனிதவதியார் இல்லத்தில் மட்டுமே. சிறு வயது முதல் சிறந்த சிவபக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும்பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி செல்வார்.

    சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், பிச்சாண்டவர் கோலத்தில் உள்ள சிவபெருமானுக்கு பறிமாறுவார்.

    எனவேதான் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதியுலா முடிந்து, அமுதுபடையல்'நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும்.

    பக்தர்கள் பலர் சாமி ஊர்வலத்தின் போது, மோர், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கி வருகின்றனர்.

    Next Story
    ×