search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சோட்டப்பணிக்கன் தேரிவிளை சிவசுடலைமாடசாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது
    X

    சோட்டப்பணிக்கன் தேரிவிளை சிவசுடலைமாடசாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது

    • பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
    • மாடசாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது

    சோட்டப்பணிக்கன் தேரிவிளை சிவசுடலைமாடசாமி கோவில் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு கடல் பதம் கொண்டு வருதல் நிகழ்ச்சி, 8 மணிக்கு நையாண்டி மேளம்,

    9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை, பகல் 12 மணிக்கு நாராயணசாமிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, பிற்பகல் 2 மணிக்கு சிவ சுடலைமாடசாமி, பிரம்மசக்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு சிவ சுடலைமாடசாமிக்கு மலர் அலங்காரத்துடன் தீபாராதனையும், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மாசான சாமிக்கு தீபாராதனையும், 4 மணிக்கு களுக்கார மாடசாமிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×