search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் கோவிலுக்கு மஞ்சள் ஆடை உடுத்தும் பக்தர்கள்
    X

    சமயபுரம் கோவிலுக்கு மஞ்சள் ஆடை உடுத்தும் பக்தர்கள்

    • தங்களுக்குத் தெரிந்த பாடல்களையே விதம்விதமாக பாடுவர்.
    • தாங்கள் உண்ணும் எளிய உணவையே அம்மனுக்கு வைத்துப் படைப்பர்.

    தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் இருந்தாலும் கூட, ஒவ்வொரு கோவிலிலும், ஆண்டில் ஏதேனும் ஓரிரு நாட்களோ அல்லது சில நாட்களோ மட்டும் விழாக்கள் நடைபெறும். ஆனால், சமயபுரம் கோவிலில் ஏதேனும் விஷேச நிகழ்ச்சி மாதம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும். முக்கியமாக கிராம மக்கள், மன மகிழ்ச்சியோடு, தங்கள் சொந்த வீட்டு விழாவாக தங்கள் ஈடுபாட்டோடு கொண்டாடுவர்.

    இந்தச் சிறப்பு வேறு எந்த கோவிலுக்குமில்லை. பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி முளைப்பாரி, செடல் எடுத்தல், கரகம், தீச்சட்டி ஏந்துதல், மாவிளக்கு, குத்துவிளக்கு பூஜை, பால்குடம், பூக்குழி என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கோவில்களில், மக்கள், தாங்கள் தொன்று தொட்டு பின்பற்றி வந்த மரபை கொஞ்சமும் மாற்றாமல் உற்சாகமாகக் கொண்டாடுவர்.

    தாங்கள் உண்ணும் எளிய உணவையே அம்மனுக்கு வைத்துப் படைப்பர். தங்களுக்குத் தெரிந்த பாடல்களையே விதம்விதமாக பாடுவர். எந்த ஆகம விதிகளும் அந்நிய மொழிகளும் அவர்கள் ஈடுபாட்டிலும், வழிபாட்டிலும் குறுக்கிடுவதில்லை. அம்மனை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக, தங்கள் தாயாக, மகளாக, தங்களுக்குத் துணை நிற்கும் காவல் தெய்வமாகக் கருதுகின்ற அந்தப் பிணைப்பு இவ்விழாக்களில் தெரியும்.

    அதே போல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் எத்தனையோ பிரார்த்தனைகள் உண்டு. அதில் ஒன்று கரும்புத் தூளி பிரார்த்தனை. குழந்தை இல்லாதவர்கள் அம்மனை வேண்டிக் கொண்டு குழந்தைப்பேறு பெறுகின்றனர். அப்படி பெற்றவர்கள், சீமந்தத்தின் போது அளிக்கப்பட்ட, சீமந்தப் புடவை வேஷ்டியை பத்திரமாக வைத்திருந்து, குழந்தை பிறந்த ஆறாவது மாதம், மஞ்சளில் நனைத்து, கரும்பு தொட்டில் செய்து குழந்தையைக் கிடத்தி, தந்தை முன்னும் தாய் பின்னுமாக மூன்று முறை வலம் வருகின்றனர். இவையெல்லம் அம்மனை மனதில் வைத்து பக்தர்கள் வழிபடும் முறையாகும்.

    Next Story
    ×