என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
தூய சகாய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது.
- 21-ந்தேதி நிறைவு திருப்பலி நடக்கிறது.
காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சகாய அன்னையின் உருவக்கொடி ஆலய வளாகத்தில் பவனியாக கொண்டு வரப்பட்டது. கொடியினை தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி அதிபர் வின்சென்ட் அமல்ராஜ் புனித நீரால் அர்ச்சித்து கொடிமரத்தில் ஏற்றினார். தொடர்ந்து பங்கு தந்தையர்கள் எட்வின் ராயன், ஜேம்ஸ் ராஜா ஆகியோர் திருவிழா திருப்பலி நிறைவேற்றினார்கள். நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சிகள், சிறப்பு திருப்பலி, அன்னையின் உருவம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு பவனி வருகிறது.
21-ந் தேதி நிறைவு திருப்பலி நடக்கிறது. திருப்பலி முடிவில் அன்னையின் கொடி இறக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்