search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    பழனி முருகன் கோவிலில் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

    • படிப்பாதையில் கடுமையான கூட்டம் காணப்பட்டது.
    • இரவில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், வார விடுமுறை நாளையொட்டி இரு மடங்கு பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி நேற்று வார விடுமுறையொட்டி, பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவில், பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் கடுமையான கூட்டம் காணப்பட்டது. இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மலைக்கோவிலில் பொது, கட்டணம், கட்டளை தரிசன வழிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் பக்தர்கள் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் நிலவியதால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து இரவில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×