search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: கல்யாண, பிரசன்ன வெங்கடேஸ்வரர் அனுமன், யானை வாகனங்களில் உலா
    X

    அப்பலாயகுண்டா கோவிலில் அனுமன் வாகன வீதிஉலா நடந்தபோது எடுத்தபடம்.

    பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: கல்யாண, பிரசன்ன வெங்கடேஸ்வரர் அனுமன், யானை வாகனங்களில் உலா

    • மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
    • பஜனைகள், பக்தி பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது.

    நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், ராமச்சந்திரமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து மதியம் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியங் களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வசந்தோற்சவம் நடந்தது. இரவு யானை வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதேபோல் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அனுமன் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர், கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பஜனைகள், பக்தி பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புண்யாஹவச்சனம், வசந்தோற்சவம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை யானை வாகனத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    Next Story
    ×