search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா
    X

    திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா

    • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
    • பல்வேறு காரணங்களால் கடந்த 16 ஆண்டுகளாக தெப்ப திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது, தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி ஐந்துமுறை சுற்றிவந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பல்வேறு காரணங்களால் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தெப்ப திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றதால் இதனை காண திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×