search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

    ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 16-ந்தேதி வேதாளம் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
    • 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறும்.

    நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தில் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கொடியினை நடேசன் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். 8-ம் திருநாளான 15-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு பெருமாள் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    9-ம் திருநாளான 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நாதஸ்வரம் இசை மற்றும் சிறப்பு பூஜையும், தொடர்ந்து வில்லிசையும் நடைபெறும். நள்ளிரவு 1 மணிக்கு முத்தாரம்மன் எழுந்தருளல், பத்திரகாளி அம்மன் எழுந்தருளல், வேதாளம் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    17-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் மாரியம்மன் உலா வருதல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு சுடலை ஆண்டவர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 5 மணிக்கு வாணவேடிக்கை, செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சமய மாநாடும், தொடர்ந்து இரவு சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை முத்தாரம்மன் கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×