search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிள்ளையார்புரம்தேவி முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    பிள்ளையார்புரம்தேவி முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது

    • நாளை தொடங்கி 11-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • அம்மன் வாகன பவனி நடைபெறுகிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு பக்தி மஞ்சரி நிகழ்ச்சியும், நாதஸ்வர கச்சேரியும் நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு சக்தி மகளிர் மன்றத்தாரின் பஜனையும், 8 மணிக்கு அதிர்ஷ்ட பிள்ளையாருக்கு பூஜையும், 9 மணிக்கு குருசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், 10 மணிக்கு சுடலைமாடசாமிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும், 11 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 1:30 மணிக்கு சாஸ்தா சாமிக்கு அலங்கார பூஜையும், பெருமாள் சாமிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வில்லிசையும், மதியம் 1.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், பைரவநாதன் பூஜையும், அன்னதானமும், மாலை 4 மணிக்கு நாசிக்டோல் நிகழ்ச்சியும், 5.30 மணிக்கு கால சாமிக்கு சிறப்பு பூஜையும், 6.30 மணிக்கு பக்தர்கள் அம்பாளை வரவேற்கும் முகமாக குத்து விளக்கு ஏற்றி மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மன் வாகன பவனியும் நடைபெறுகிறது. இந்த வாகன பவனியை என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., பிள்ளையார்புரம் சிவந்திஆதித்தனார் கல்லூரி தலைவர் என்.காமராஜ், செயலாளர் சி.ராஜன் மற்றும் லயன். டி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.

    இரவு 9.30 மணிக்கு உற்சவமூர்த்திக்கு ஊஞ்சல் சேவை, 10.30 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு வில்லிசையும், நள்ளிரவு 12. 30 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், உஜ்ஜைனி மாகாளி அம்மனுக்கு பூஜையும், மாரி அம்மனுக்கு பூஜையும் நடைபெறுகிறது.

    11-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு வில்லிசையும், காலை 7 மணிக்கு சிவ சுடலைமாட சாமிக்கு அலங்கார பூஜையும், சாமிகளுக்கு அமுது படைத்து ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கவுரவ தலைவர் ஆர்.சுரேஷ்குமார், தலைவர் சி.பொன்ராகவன், உதவி தலைவர் சி.ராஜேஷ் என்ற வீரமணி, செயலாளர் ஆர்.கனகராஜன், உதவி செயலாளர் டி.முத்துகுமார், பொருளாளர் பி. பரமேஸ்வரன், சட்ட ஆலோசகர் டி.தங்கசுவாமி மற்றும் ஊர் மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×