search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேல்மலையனூர் அங்காளம்மன் வழிபாடு முறைகள்
    X

    மேல்மலையனூர் அங்காளம்மன் வழிபாடு முறைகள்

    • அம்பிகைக்கு உரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.
    • திருமணம் என பல தடைகள் அம்மனை வழிபடுவதால் விலகும்.

    அங்காளம்மனை வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற, வேப்பஞ்சேலை அணிந்து, கோவிலை வலம் வருகிறார்கள். பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்த வழிபாடு உண்டு. அதை இப்போது பக்தர்கள் இங்கும் பின்பற்றுகிறார்கள். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இங்கு வந்து பொங்கல் வைக்கிறார்கள்.

    பொங்கல் பானையின் மேல் மூடியில் பச்சரிசி மாவிளக்குப் போட்டு நெய் தீபம் ஏற்றி சன்னதிக்குள் எடுத்துச் செல்வார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த வைபவம் உண்டு. பால் அபிஷேகம், வஸ்திரம் சாற்றுதல், மாவிளக்கு போடுதல், நெய் தீபம் ஏற்றுதல் என்று அம்பிகைக்கு உரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

    சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பிரிந்த கணவன், மனைவி இணைய, குழந்தைப்பேறு, திருமணம் என பல தடைகள் அம்மனை வழிபடுவதால் விலகும் என்கிறார்கள். மயானக் கொள்ளை முடிந்த பிறகு சாம்பலே பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அதை வீட்டில் கொண்டு வந்து வைத்தால் தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் பக்தர்கள். தன்னை நம்புபவர்கள் மட்டுமல்லாமல் அல்லலில் உள்ள அன்பர்களையும் தன்னிடம் ஈர்க்கும் வல்லமை பெற்றவள் மேல்மலையனூர் அம்மன்.

    மயானக் கொள்ளையில் கலந்து கொண்டால் ராகு-கேது தோஷங்கள் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது பக்தர்களிடம்.

    நேர்த்தி: எலுமிச்சம்பழ மாலை, வஸ்திரம் சாற்றுதல், நெய் விளக்கு ஏற்றுதல்

    இருப்பிடம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்.

    Next Story
    ×