search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நத்தம் அருகே மலையாண்டி கோயில் திருவிழாவில் மடிச்சோறு நேர்த்திக்கடன்
    X

    திருவிழாவில் மடிச்சோறுகேட்டு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்.

    நத்தம் அருகே மலையாண்டி கோயில் திருவிழாவில் மடிச்சோறு நேர்த்திக்கடன்

    • மலையாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
    • ஏராளமான பெண்கள் மடியேந்தி சாமியிடம் பிச்சை கேட்பது போல சாதம் பெற்று சென்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடியில் உள்ள சதுரகிரி மலையில் அமைந்துள்ளது மலையாண்டி சாமி கோவில். இந்த கோவிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வளர்பிறையில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இக்கோவிலின் இந்த ஆண்டு ஆடி திருவிழா நடந்தது. இதில் விதவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலையாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

    மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு மடிப்பிச்சை சோறு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி ஏராளமான பெண்கள் தங்கள் மடியேந்தி சாமியிடம் பிச்சை கேட்பது போல சாதம் பெற்று சென்றனர். மேலும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக மலையாண்டி சாமிக்கு வெள்ளி, சில்வர், இரும்பு முதலிய உலோகங்களால் ஆன வேல்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களி லிருந்தும், வெளி மாவட்டப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பூதகுடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×