என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான திரி தயாரிக்கும் பணி தொடங்கியது
- தீப திருவிழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- மெகா திரியை 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி ஊற வைப்பார்கள்.
திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்திபெற்ற தாயுமான சுவாமி கோவில் உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும் உள்ளது. இங்கு கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள செப்புக்கொப்பரையில் 300 மீ்ட்டர் அளவு உள்ள மெகா திரி வைக்கப்பட்டு 900 லிட்டர் அளவில் எண்ணெய் ஊற்றி கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு பூர்வாங்க பூஜை நடைபெற்றது.
இதையொட்டி நேற்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக மெகா திரி தயாரிக்கும் பணி தாயுமான சுவாமி கோவில் அருகே தொடங்கியது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். இப்பணி முடிந்ததும் மெகா திரியை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் வைத்து நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்பட 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி ஊற வைப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத்தன்று அங்கு மெகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்