என் மலர்tooltip icon

    வழிபாடு

    லோகநாயகி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா 21-ந்தேதி நடக்கிறது
    X

    லோகநாயகி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா 21-ந்தேதி நடக்கிறது

    • அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
    • இரவு அம்மன் வீதி உலா காட்சி நடக்கிறது.

    கடலூர் புதுப்பாளையம் லோகாம்பாள் தெருவில் லோகநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 104-ம் ஆண்டு ஆடி மாத திருவிழா வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையடுத்து அன்று காலை 8 மணிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வருதல் வீதி வலம் வருதல், தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.

    மதியம்12 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், 8 மணிக்கு வீரனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதன்பிறகு இரவு அம்மன் வீதி உலா காட்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×