என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- பஞ்சமூர்த்தி சாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
- திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடதிருமுல்லைவாயலில் உள்ள பழமையான கொடியிடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜையும், அதைதொடர்ந்து யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்துவரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசங்களுக்கும், அதை தொடர்ந்து மூலவர் மாசிலாமணீஸ்வரர் கொடியிடை நாயகி மற்றும் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கொடி மரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா" என பக்தி கோஷங்களை எழுப்பினர். மாலையில் திருக்கல்யாண வைபவமும், இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் திருவீதி உலாவும் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் நாசர், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், கோவில் அறங்காவலர், செயல் அலுவலர், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்