search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்
    X

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்

    • இந்த கோவிலில் தூக்க திருவிழா மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
    • இன்று முதல் பூஜை நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவிலில் தூக்க திருவிழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் தேவி விக்ரகங்களுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கோவிலில் நடைபெறும் வழக்கமான பூஜைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை மதிய நேர பூஜை காலை 10 மணிக்கு நடத்தப்படும் 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர், மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

    இந்த நேரங்களில் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாக செயலாளர் மோகன்குமார் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×