search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது.
    • இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

    நெல்லை மாவட்டம் காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நேற்று காலை 9.15 மணிக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவிலில் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் பொறுப்பாளர் சங்கராத்மஜன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், உதவியாளர் பசுபதி உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வழக்கமாக இக்கோவிலின் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு விழா நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அகஸ்தியர்பட்டியில் இருந்து நாள் ஒன்றுக்கு 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல காணிக்குடியிருப்பில் இருந்து இரவு 7 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். தேவைப்பட்டால் இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தற்காலிகமாக மொத்தம் 400 சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக கோவிலின் சார்பில் வைக்கப்படும் கடைகளில் பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. முக்கியமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு வரக்கூடாது. ஓட்டல் மற்றும் கடைகளில் வாழை இலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோவில் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 45 தண்ணீர் குழாய்கள் வைக்கப்படுகிறது. ஆடு வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்யும் போது ஆற்றுத்தண்ணீரில் ஆட்டின் ரத்தம் கலப்பதை தடுக்கும் விதமாக பட்டவராயன் சன்னதிக்கு முன் சிறப்பு மணல் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×